என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷம் கொடுத்து கொலை"
- குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.
- திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23).
இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கமே காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25ம் தேதி இறந்தார்.
இதுதொடர்பாக அவரது தந்தை ஜெயராஜ், பாற சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காதலி கிரீஷ்மாவை வீட்டில் சந்தித்துவிட்டு வந்த பிறகு தான், தனது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது, விஷம் கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர், காதலன் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விஷ பாட்டில் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருப்பதும் அதனால்தான் காதலனை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் உள்ளதாகவும் அதனால் தான் காதலனை திருமணம் செய்து பின்னர் கொலை செய்ய அவர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்படி அவரை திருமணம் செய்த கிரீஷ்மா, கடந்த சில மாதங்களாகவே ஷாரோன் ராஜை கொலை செய்ய முயற்சித்திருப்பதும், இதற்காக அவரை பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும் அங்கு 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் ஷாரோன் ராஜிக்கு குளிர்பானத்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்ததாகவும் போலீசாரிடம் கிரீஷ்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் போலீசார், கிரீஷ்மாவை அவர் காதலனுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஷாரோன்ராஜிக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த பாத்திரம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஷாரோன்ராஜூடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர். அதில் இருப்பது கிரீஷ்மாவின் குரல் தானா என்பதை உறுதி செய்ய நேற்று கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் அவர், ஷாரோன் ராஜை திருமணம் செய்ததாக கூறப்படும் வெட்டுகாடு தேவலாயத்திற்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
இன்று காலை குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணயைில் கடந்த 2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்