search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் கொடுத்து கொலை"

    • குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.
    • திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.

    குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23).

    இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கமே காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25ம் தேதி இறந்தார்.

    இதுதொடர்பாக அவரது தந்தை ஜெயராஜ், பாற சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காதலி கிரீஷ்மாவை வீட்டில் சந்தித்துவிட்டு வந்த பிறகு தான், தனது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது, விஷம் கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர், காதலன் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விஷ பாட்டில் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருப்பதும் அதனால்தான் காதலனை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் உள்ளதாகவும் அதனால் தான் காதலனை திருமணம் செய்து பின்னர் கொலை செய்ய அவர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.

    அதன்படி அவரை திருமணம் செய்த கிரீஷ்மா, கடந்த சில மாதங்களாகவே ஷாரோன் ராஜை கொலை செய்ய முயற்சித்திருப்பதும், இதற்காக அவரை பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும் அங்கு 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் ஷாரோன் ராஜிக்கு குளிர்பானத்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்ததாகவும் போலீசாரிடம் கிரீஷ்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் போலீசார், கிரீஷ்மாவை அவர் காதலனுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஷாரோன்ராஜிக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த பாத்திரம் கைப்பற்றப்பட்டது.

    தொடர்ந்து கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஷாரோன்ராஜூடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர். அதில் இருப்பது கிரீஷ்மாவின் குரல் தானா என்பதை உறுதி செய்ய நேற்று கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும் அவர், ஷாரோன் ராஜை திருமணம் செய்ததாக கூறப்படும் வெட்டுகாடு தேவலாயத்திற்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.

    இன்று காலை குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணயைில் கடந்த 2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    சென்னை குன்றத்தூரில் தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தப்பி ஓடிய பெண்ணை நாகர்கோவிலில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீடுகள் வாங்க, கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.  கணவன்-மனைவி இருவரும் பட்டப்படிப்பு படித்து உள்ளனர்.

    மாத கடைசி என்பதால் நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவியும், குழந்தைகளும் மட்டும் இருந்தனர்.

    வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    தனது 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, போலீசுக்கு பயந்து அபிராமி தப்பிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையில் நேற்று காலை விஜய் மற்றும் அபிராமியின் உறவினர்களின் செல்போன்களுக்கு அபிராமியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வந்தது. அதில் அவர், “எனது குழந்தைகளே சென்று விட்டபிறகு, இனி நான் இருந்தால் என்ன?, செத்தால் என்ன?” என குறிப்பிட்டு இருந்தார்.

    அதை பார்த்த விஜய், “ஏன் இப்படி செய்தாய்? எனக்கேட்டு மீண்டும் மனைவியின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினார். ஆனால் அவரிடம் இருந்து அதற்கு பதில் வரவில்லை. இதனால் அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே அபிராமி, தனது வீட்டில் இருந்து மொபட்டில் கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.

    குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.

    இந்த நிலையில், பாலில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி நாகர்கோவிலில் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.  அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ×